Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

11 அக்., 2011

தேவதைகளின் முதலிரவு...!!!


தேடிப் பார்த்தது கிடைக்கவில்லை!
பேசி முடித்ததில் திருப்தியில்லை!
"கண்டவன்" என பெற்றவர் சொன்னதை,
"வந்தவன்" கொண்டதாய் இல்லை!
வாழ்ந்து கொண்டவரை... தொல்லை!!!

வாழும் காலம் முழுதும்,
அவன் வாழ்வதைப் பார்த்து...
கண்களைக் கசக்கியபடியே...
கசக்கிய விழிகளிலும்,
"அவன்" என்பவனே வந்து நிற்கின்றான்!!!

என்னவென்று சொல்லியழ முடியாமலும்,
"ஓ"வென்று கதறியழ இயலாமலும்,
இதயத்தின் நான்கறைகளுக்குள்ளும்...
நசுங்கிப் போகின்றது - தேவதைகள்
கசக்கி எறிந்த காதல்கள்!!!

அதைப் பொறுக்கியெடுத்து...
பொக்கிஷமாய் பாதுகாக்கும்,
தேவைகளின் தேவர்களுக்கு...
தேவதைகளின் அழுகுரல்கள்,
என்றைக்கும் கேட்பதில்லை!!!
 
தேவதைகளின் இரவுகள்...
முதல் இரவிலிருந்தே தொடர் கதைதான்...!
அவர்களின் அழுகுரல்களை...
குரைக்கும் நாய்களும்... இரவின் இருட்டும்....
யாருக்கும் தெரியாமல் அடக்கி விடுகின்றன!!!

மனம் மாறிய தேவதைகளின்,
வாழ்க்கைகளும் மனங்கோணிப் போன...
கதைகள் பல இருந்தும்...
மனம் மாறத் துடிக்கும் தேவதைகளுக்கு...........
இக்கவிதை சமர்ப்பணம்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக