Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

23 ஆக., 2013

எதுவுமே நடக்கவில்லை...!?


எங்கேயோ கேட்கிறது
அந்த முனகற் சந்தம்!
காரிருள் கவ்விய பொழுதில்...
ஈருடல் தழுவிய நிலையாய்...
யாருமறியாமல் நடக்கிறது கதகளி!
 

கையில் அகப்பட்டதையெல்லாம்
அள்ளியெடுக்கிறான் திருடன்!
மெய்யில் வசப்பட்டதையெல்லாம்
அள்ளிக்கொடுக்கிறாள் திருடி!
கன்னக்கோல் கன்னம் வைக்க
எண்ணம்போல் கன்னம் சொக்க,
கொஞ்சங் கொஞ்சமாய் திருடுபோகிறது!
கொஞ்சிக் கொஞ்சி உதடு நோகிறது!
 

பின்னிப் பிணைந்த அரவங்கள் போல்
எண்ணித் துணியும் அவயவங்களுக்குள்,
சிக்கித் தவிக்கிறது ஒளிபடா இடங்கள்!
தறிகெட்டுப்போன மனதுக்கும்
வெறி முற்றிப்போன உடலுக்கும்
விடை கொடுக்கின்றன துகிலங்கள்!

பாலாடை நீக்கி பால்பருக...
பசியோடு காத்திருந்த பாலகன்போல்
மேலாடை விலக்கி அடம்பிடித்து,
கீழ்நோக்கி நகர்கின்றான் பாதகன்!



வண்ணத்துப் பூச்சிகள் வட்டமிட
நட்சத்திரப் பூக்களில் உட்கார்ந்து
தேன்குடிக்கிறது வண்டு!
உஷ்ணக் காற்றில்...
மூச்சிரைத்து மின்னுகின்றது,
மூக்குத்தி நட்சத்திரம்!

பிரிந்து நிற்கும் காற்கொலுசுகளின் நடுவே
விரிந்து கிடக்கும் புல்வெளியை
சத்தமின்றி நனைக்கின்றன...
மழைச்சாரல் துளிகள்!
தொடர்ந்து பெய்த மழையில்...
நிரம்பி வழிகின்றன இடை வெளிகள்!


சத்தமாய்த் தொடங்கி...
சந்தமாய் நகர்ந்து...
மொத்தமும் அடங்க,
வெளிச்சத்தை நோக்கி நகர்கின்றன..
துகிலணிந்த உருவங்கள்!


எதுவுமே நடக்கவில்லையென,
வெளிச்சத்தின் மேல் சத்தியம் செய்கிறது...
காரிருள்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக