என்னுடைய அதிகபட்ச ஆசைகள் என்பதெல்லாம்,
நான் எழுதுகின்ற மாதிரியே வாழணும்!
வாழுகின்ற விஷயங்களையே எழுதணும்!... என்பதுதான்!!
எதிர்த்த மாடிக்கட்டிடங்களின் கண்ணாடிகளில்,
முகம் பார்க்கவேண்டிய நிர்ப்பந்தம்!
அவை முகத்தில் ஓடும் சோக நரம்புகளை மட்டுமே
பெருப்பித்துக் காட்டுகின்றன!
எம் கண்ணீரில் பட்டுத் தெறிக்கும் சூரிய ஒளியும் வானவில்லாகி...
கட்டணப் பரிமாற்றங்களில் ஊர்போய்ச் சேர்கின்றது!
அந்நியத் தெருக்களில் கொஞ்ச தூரம் நடந்தவுடன்,
களைத்துப் போகின்றேன்... ! ஏனென்று புரியவில்லை!?
பழக்கப்படாத தெருக்களும், கொஞ்சம் பழகின முகங்களும்...
ஏதோ, அகழிகள் போல் பயமுறுத்துகின்றன!
என்னுடைய ஊர் ஒழுங்கைகளின் புழுதிமண் வாசனையும்...
மழைக்கால சகதிகளும்... இப்பொழுது, எவ்வளவோ சந்தோசமாய்த் தெரிகின்றன!
ஒற்றைப் பையில் நாலு தாள்கள் என்னிடம்!!
இங்குள்ள நாய் கூட என்னைப் பார்த்துக் குரைக்கும்!!!
மேலும் கீழுமாய் நாலு பைகளிலும்...
கட்டுக்கட்டாய் வண்ணத் தாள்களும்..
கீறல் படாத கடனட்டைகளும்..
நாலு சில்லுடனும்... உள்ளே ஜில்லுடனும்...இடமிருந்தால்...
நாலுபேர் வந்து தோளில் சுமக்கும்..
மண்மீது வாழ்ந்துகொண்டு...கண்ணீரைக் குடித்தபடி,
உண்மையாய் சுமப்பதற்கு நாலுபேரைக் காண்பதற்கு ...
என் நிலம் வேண்டும் எனக்கு!!!
9 ஆக., 2011
7 ஆக., 2011
உன்னோடு ஒரு இரவு
உணர்ச்சியலைகள் அடித்தோய்ந்த பின்பும்
உன் கரையில் மணலையள்ளி வருடியபடி
வெண்ணிலா உன்னை ரசித்திருப்பேன்!
கடல் மீண்டும் கரைதொடும்...
நிலவு மீண்டும் வானம் வரும்... என்ற எதிர்பார்ப்புடன்,
வெற்று வானத்தை பார்த்தபடி...
சுடுமணலில் நான்!
உன் கரையில் மணலையள்ளி வருடியபடி
வெண்ணிலா உன்னை ரசித்திருப்பேன்!
கடல் மீண்டும் கரைதொடும்...
நிலவு மீண்டும் வானம் வரும்... என்ற எதிர்பார்ப்புடன்,
வெற்று வானத்தை பார்த்தபடி...
சுடுமணலில் நான்!
6 ஆக., 2011
காதல் யுத்தம்
கைக்கு எட்டாத வானமாய் - என்
கண்களில் தெரிகின்றாய் நீலமாய்!
தொலைதூர நோக்கங்கள் எதுவுமில்லை,
தோலுரித்த இசைகளைத் தவிர!
உன் புன்னகைக்குள் விழுந்து கிடக்கும் வீரனாய்,
இன்னும் இருக்கின்றேன் உயிருடன்!கண்களில் தெரிகின்றாய் நீலமாய்!
தொலைதூர நோக்கங்கள் எதுவுமில்லை,
தோலுரித்த இசைகளைத் தவிர!
உன் புன்னகைக்குள் விழுந்து கிடக்கும் வீரனாய்,
உன் கண்கள் இன்னும் என்னைச் சீண்டுகின்றன...
கூர்மையான வாளுடன்!
கொஞ்சமேனும் தள்ளிப்போடு யுத்தத்தை,
நான் போராட என்னுயிர் வேண்டும்!
அதுவும்.... நீதான்!
4 ஆக., 2011
நான்கு வரிக் காதல்
உள்ளம் பேதலிக்க... எண்ணம் கொடு!
என் வாழ்விலும்... வண்ணக் கோலமிடு!
எல்லை மீறும்போது... என்னைத் தடு!
"கொஞ்சக்" கனவிலேனும்... என்னை விடு!
என் வாழ்விலும்... வண்ணக் கோலமிடு!
எல்லை மீறும்போது... என்னைத் தடு!
"கொஞ்சக்" கனவிலேனும்... என்னை விடு!
2 ஆக., 2011
புரிதல்களும் புரியாமையும்
அறுத்தெறியப்பட்ட இதயத்தின் இரத்தக் குழாய்கள்
கொப்பளித்த சிவப்பணுக்களில் - என்
உயிர் உச்சரித்த உன் காதற் சிதறல்களைத்
தேடிக்கொண்டிருக்கின்றேன் இன்னும்!
புரிதல்களும் புரியாமையும் புரிந்துகொள்ளப்படுவதற்கு
சில காலங்கள் செல்லும்!- அதுவரை
இந்த ரணவலித் தேடல்கள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்!!!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




