அவள் முகத்தில் விழிப்பதனால்!
ஒவ்வொரு நாளும் அவளோடுதான்...
ஆனந்தமாய் விடிகிறது!
ஒவ்வொரு நொடியும் அழகாக...
விதம்விதமாய்த் தெரிவாள்!
கழுவாத முகத்தோடும்
களையாக இருப்பாள்!
களைத்தாலும் சளைக்காமல்
அவள் வேலை முடிப்பாள்!
உழைத்தாடி வரும் தலைவன்
களைப்பெல்லாம் போக,
கனிவான வரவேற்று
அன்பாகப் பார்ப்பாள்!
குழந்தையாய் சிரிப்பாள்…
அவனோடு.... குழந்தையும் சுமப்பாள்!
உயிரோடு உயிராக…
உலகமே அதுவாக,
அவனுக்கும் அவளுக்குமாய்…
அவளின் சின்ன உலகத்துக்காய்...
அவள் தன் உயிரையும் கொடுப்பாள்!
ஒவ்வொரு மனைவியும்
அவள் கணவனுக்கு...
இரண்டாவது தாய்தான்!!!
So...Guys!
1 கருத்து:
உண்மையான மனைவி கணவனுக்கு கிடைத்த வரம்
கருத்துரையிடுக