Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

29 ஏப்., 2014

காதலின் பெயரால்...



நம்பிக்கைகள் கைகோர்த்து நடக்க
எண்ணங்கள் இணையாக பிறக்க
பல வண்ணங்கள் இழையோடிச் சிறக்க
இரு உள்ளங்கள் உறவாடிப் பழகும்
இனிமையான காலத்தின் பெயர்தான் 'காதல்'


அப்படியான  இனிதான பொழுதுகளை
முன்னொரு நாளில்....
நீயும் நானும் பகிர்ந்திருந்தோம்!


காதலையும் அன்பையும்
அள்ளிக்கொடுத்த நீயேதான்,
பின்னொரு நாளில்....
பிரிவையும் வலியையும்
வாரியிறைத்துவிட்டுப் போனாய்!
நீ தந்துவிட்டுப்போன
அந்த வலிகளைத் தாண்டி வெளியேவர...
நான் பல  ஜென்மங்கள்
எடுக்க வேண்டியிருந்தது!


இன்னும் என் இரவுகள்...
என் தூக்கத்தை திருப்பித்தரவில்லை!
இன்னும் உன் ஞாபகங்கள்...
எனைத் தீயால் தீண்டுவதை நிறுத்தவில்லை!


வலிகள் ஒருவனை வலிமையாக்கும்!
எப்படியான துன்பத்தையும்...
புன்னகையோடு வரவேற்கும் வல்லமையை,
உன் துரோகம் தந்துவிட்டுப் போயிருக்கிறது!
இப்பொழுதெல்லாம் நான்...
கண்ணீரை வீணாக்குவதில்லை!!


கடந்து வந்த பாதைகள்...
எப்பொழுதும் நினைவில் இருக்கு!
நடந்து முடிந்த நாடகங்கள்...
இப்பொழுதும் மனதில் இருக்கு!


துரோகங்கள் மறக்கப்பட்டுவிடுமென
அதைச் செய்தவர்கள் நினைக்கலாம்!?
ஆனால்...ஏனோ தெரியவில்லை,
துரோகங்களை மட்டும்
இலகுவில் மறக்கமுடிவதில்லை..!
மன்னிக்கவும் முடிவதில்லை!!
'மன்னித்து விடலாம்' எனச் சொல்லும்
அதே மனதுதான்.... மறக்கவும் மறுக்கிறது!


ஒரு சாதாரண மனிதனின் வாழ்வை...
சதா   ரணமாக்கி இருக்கிறாய்!
உயிரோடு வாழும்...
பிணமாக்கி இருக்கிறாய்!
உன் துரோகங்களுக்குத் தண்டனையை
நான் கொடுக்கப்போவதில்லை
அதை உன் மனச்சாட்சியே பார்த்துக்கொள்ளட்டும்!


ஆனால்....
எனக்கென்று ஒருநாள் வரும்
உனைக் காண!
நிச்சயமாக.... அந்தநாள்,
உனக்கானதாக இருக்காது!


********   ********   ********   ********   ********

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக