Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

24 ஆக., 2013

கண்களால் களவாடுறாள்...!




கயல் விழியாள்...
பயல் மனசைப் பறிக்க,
வயல் வழியால் ஏதோ
புயல் வருதே!

காதலும் வேண்டாம்...
கூடலும் வேண்டாமென...
ஒதுங்கிப் போனவனின் மனம்,
பதுங்கிப் பாய்கிறதே!
செதுக்கிய சிற்பங்களின் பார்வையில்
வழுக்கிய இதயம் இடறி...
வாய்க்காலோரமாய் விழுகிறதே!

மனத்தடைகளைத் தகர்த்து...
உடலுடைகளை அவிழ்த்து...
தன் படைகளால் ஆக்கிரமிக்கும் பாதகி!
கண்ணகி காலத்தில் வாழ்ந்த மாதவி!!
கோவலனாகி கோணலாய்...
கேவலமாகி நாணலாய்...
மாறும்வரை மாற்றுகிறாள்!

முத்து முத்தாய் முத்தங்கள்...
ஒத்திக்கொள்ளும் சத்தங்கள்...
தூறும் மழைச் சாரலைப்போல்,
மெதுமெதுவாய் நனைக்கிறாள்!
நனைந்தவன் மேனியில்,
புனைந்தவள் தாகம் தீர்க்கிறாள்!


சிதைந்தவனின் சிந்தையில்...
புதைந்தவனின் விந்தையில்...
இணைந்தவள்,
மொந்தையில் கள்ளூற...
மெத்தையில் உள்ளூற...
வித்தையால் விளையாடுகிறாள்!


ஒரு கள்வனிடமே களவாடி முடிக்கிறாள்!
இரு கண்களினால் களமாடி வெடிக்கிறாள்!
கண்களால் களவாட
பெண்களால்தான் முடிகிறதே!!! ;)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக