Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

14 ஏப்., 2014

கல்யாணம் 2 காதல்


கொஞ்சங் கொஞ்சமாய்க் கொள்ளை அடிக்கிறாள்!
என் மனசுக்குள்ளே வெள்ளை அடிக்கிறாள்!
வண்ணங்களை அள்ளித் தெளிக்கிறாள்!
 
என் எண்ணங்களைக் கிள்ளி எடுக்கிறாள்!

மீண்டுமொரு புயல் வருதா?
உயிரோடு சாகடிக்க!
இன்னுமொரு முறை வருதா?
காதலித்துப் பேதலிக்க!


நல்ல மாட்டுக்கு ஒரு சூடு - அதுபோல
நொந்த மனசுக்கு ஒரு காதல்!
தோல்விகள் தருவது... வலிகளை மட்டுமல்ல,
நல்ல அனுபவங்களையும்தான்!!


காதலித்துத்தான் கட்டுறாங்கள்...!
பிறகேன்... சத்தம் போட்டு கத்துறாங்கள்?!
காதலித்தபோது இருந்ததெல்லாம்,
கல்யாணத்தோடு காணாமல் போச்சா?!

அவளைத் 'தேவதை' என்றவன்- இப்போது
'அவளே தேவையில்லை' என்கிறான்!
இவளே என் வாழ்வென்றவன் - இனி
வாழ வழியில்லையென பிரிகின்றான்!


காதல் எங்கே போச்சுது?
அதுக்கு என்ன ஆச்சுது?
காதல் தானே சாய்ச்சுது?
இப்ப என்ன பேச்சிது?


தாலிக்கயிறு ஏற்றும் வரை...
காதல் தூக்கில் தொங்க மாட்டேன்!
கல்யாணம் கட்டும் வரை...
அதை எட்டிக்கூட பார்க்கமாட்டேன்!


தாலி கட்டிக் காதலிப்போம்!
தாயைப்போல நேசிப்போம்!
காதலைத்தான் யாசிப்போம்!
இல் வாழ்வுதனைப் பூசிப்போம்!


திருமணத்தால் இணைந்து
இருமனதால் கலந்து...
ஒரு மனதாக,
கல்யாணத்தின் பின் காதல்,
கல்லறை வரைக்கும்....
தொடரும் வாழ்தல்!


மீண்டுமொரு முறை அவள் பெயரை
அனுமதியின்றி உச்சரிக்கின்றேன்!
ஏய் தேவதையே....!
நிறைய காதலிக்க வேண்டும் காத்திரு...!!
நம் கல்யாணம் முடியட்டும்...!!!

 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

குறிப்பு :

'திருமணத்தில் முடிவது' என்பதுதான் 'காதலின் வெற்றி' எனக் கருதுவது மிகத்தவறானது. பல காதல்கள் கல்யாணத்தின்பின் காணாமல் போய்விடுகின்றன.
 'காதல்' என்பது வாழ்வின் இறுதிவரை வரவேண்டியது. திருமணத்தின் பின்னர் இன்னொரு பரிமாணத்தை அடையும் காதலையும்... காதலோடு காதலிக்கத் தெரிந்தவர்கள்தான்............
காதலிலும் ஜெயிக்கின்றார்கள்...! வாழ்க்கையிலும் ஜெயிக்கின்றார்கள்...!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக